’கூட்டாஞ்சோறு’, உண்மையில் எங்களின்(வில்லன்,உதயன் மற்றும் நான்) வாசகர் வட்டம் இங்குதான் தொடங்கியது. கம்மங்கூழும், கேப்பைகூழும் குடித்துக்கொண்டே ’ஜே.ஜே சில குறிப்புகள்’ புத்தகத்தின் விமர்சனம் இங்குதான் ஆரம்பித்தோம். பின்னர் வந்த பன்னீர் ஃபரைட் ரைசையும், பிரிஞ்ச் சாதத்தையும் சாப்பிட்டு முடிக்கும்போது மணி சரியாக 3.45ஐ தொட்டிருந்தது, கிளம்பலாம் என்று முடிவு செய்தபோது வில்லனே பெருந்தன்மையாக கூழுக்கும் வெரைட்டி ரைசுக்கும் ஸ்பான்சர் செய்து விட்டு டெசர்ட்டாக ஃபேண்டாவையும்,லிம்காவையும் வாங்கி கொடுத்த பாங்கைகண்டு நானும் உதயனும் வியந்தோம்.
சரியாக 4.50 மணிக்கு விழியன் அண்ணன் வீட்டினுள் நுழைந்தோம் எங்களை கண்டதும் குழலி அவளுடைய பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்த ஆரம்பித்தாள் (என்னை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பாள் போல). நாங்கள் சாப்பிட்ட கூழ் பற்றி சொன்னதும் விழியன் அண்ணனின் வாட்டர்ஃபால்ஸ் தானாக கொட்டியது, மறுநாள் அந்த ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்ததை அவரின் முக அசைவுகள் காட்டிக்கொடுத்தது. இடையிடையே போன் செய்து தன் வரவை உறுதி செய்து கொண்டிருந்தான் மோர், அவன் ஐயப்பன்தாங்கல் வந்ததும் அவனை அழைத்து வர போவதாக சொல்லிக்கொண்டிருந்த உதயன், கடைசி வரையில் அவனை அழைத்து வராமல் விட்டது ஏன் என்று புரியாத புதிராகவே உள்ளது. அவன் வந்ததும் வில்லனை, நிலாரசிகன் என்று சொல்லி வரப்போகும் அடிதடியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தலாம் என்று நானும் விழியன் அண்ணனும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும்போதே உதயன், வில்லனை வில்லன் என்றே அறிமுகப்படுத்தி எங்கள் முயற்சியை தூளாக்கினான். மோரின் சாந்தகுணத்தால் அங்கு நடக்க இருந்த அடிதடி முடிவுக்கு வந்தது (தேங்க்ஸ் டூ மோர்). பிறகு அருகிலிருந்த கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருக்கும்போது சாஃப்ட்வேர் இஞ்சினியர் எந்த உடை அணியவேண்டும் என்று உதயனும், மோரும் பின்நவீனத்துவம் சார்ந்த விவாதத்தில் ஈடுபட இறுதியில் உதயன், மோரிடம் சரணடைந்தான்( மோர் ராக்ஸ்)...
5.45 மணியளவில் முதல் சுற்று ஆரம்பம் ஆனது, எங்கேயும் எப்போதுமில் தொடங்கி வில்லனின் எழுத்தாற்றலும் அதனை சார்ந்த விமர்சனத்தையும் கடந்து ஒரு வழியாக சாப்பாட்டு வட்டம் தொடங்கியது, சண்முகத்தை அழைத்து வர உதயன் சென்றதை கண்டு (அவனை மட்டும் மெயின் ரோட்டுக்கே போய் அழைத்து வந்தான்) அனைவரும் நிம்மதி பெருமூச்சுடன் சாப்பிட ஆரம்பித்தனர். வந்ததே சாப்பிடத்தான் என்பது போல வில்லனும்,நந்தாவும் இடியாப்பத்தை பிரித்து மேய அவர்களுடன் போட்டி போடுவது போல் நரேஷும்,மோரும் வெஜ்பிரியாணியை வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தனர்( மோர் ஆல்வேஸ் ராக்ஸ்). முதன்முதலாக இடியாப்பத்தை சாப்பிடுவதாலோ என்னவோ நான் இரண்டு இடியாப்பத்துடன் முடித்துக்கொண்டேன்.வந்தவேலை செவ்வனே முடிந்ததும் மோர் கிளம்பினான் அவனை மெயின் ரோட்டில் விட்டுவிட்டு சிலபல இனிப்புகள் வாங்கிக்கொண்டு இரண்டாம் சுற்றை நோக்கிய என் பயனத்தை தொடங்கினேன்(வரலாற்று குறிப்பு எழுதும்போது இப்படிலாம் எழுதவேண்டி இருக்கு).
அப்பாவின் கணக்குகளையும், அம்மாவின் அபாகஸ் வகுப்பையும் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அடுத்த சுற்றை சண்முகத்தின் அறிமுகத்தோடு ஆரம்பித்தோம். ப/பிடித்த சிறுகதைபற்றிய சிறு குறிப்புகளை பகிர்ந்து கொண்டிருந்த வட்டம் நந்தாவை அடைந்தது. நந்தா, ‘தரையில் இறங்கிய விமானங்கள்’ என்ற நாவலைப்பற்றிய விமசர்னத்தை விலாவரியாக கூறி முடிக்கும்போது அந்த நாவலையே படித்து முடித்த ஒருவித திருப்தி அனைவர் முகத்திலும் தெரிந்தது. இரண்டாம் சுற்று வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் விதமாக அடுத்த சுற்றுக்கு (சாப்பிடத்தான்) அனைவரும் தயாரானோம். நள்ளிரவு சுமார் 12.30மணிக்கும் நாங்கள் ஃபார்மில்தான் இருப்போம் என்பதை அனைவரும் நிருப்பிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால் மிச்சம் மீதி இருந்த அனைத்து ஐட்டங்களையும் காலி செய்து எங்கள் நிலையை நிரூபித்தோம்.
மூன்றாம் சுற்றுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் மொட்டைமாடி. அங்கு தொடர்ந்த மூன்றாவது சுற்றில் திரைபடங்கள் பற்றியும், அதில் வரும் கதாபாத்திரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. கேமியோ கேரக்டருக்கு உதாரணமாக ‘மெளவுன ராகம்’ கார்த்திக்கை சொல்லி இதே போல் வரும் கேமியோ கேரக்டரை வரிசை படுத்த முயற்சி செய்த நிலாரசிகன் இறுதியில் கேமியோ கேரக்டரின் வரையரை என்ன என்ற அளவிற்கு விவாதம் திசைதிரும்ப அதை பாதியிலே விட்டுவிட்டு அடுத்த கேரக்டருக்கு தாவினார். பெஸ்ட் டயலாக், காமெடி என்று பல கட்டங்களை கடந்த இந்த விவாதம் இறுதியில் நிலாரசிகனின் மிமிக்ரியுடன் முடிந்தது.
வாசகர் வட்டம் என்பதைத்தாண்டி உறவுகளுடன் அன்யோன்யத்துடன் பழக கிடைத்த ஒரு வாய்ப்பாக இருந்தது. இதை சிறப்புடன் ஆர்கனைஸ் செய்த விழியன் அண்ணனுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இடியாப்பத்தை முதல்முதலாக சாப்பிட வாய்ப்பு கொடுத்த திவ்யா அக்காவிற்கும் அம்மாவிற்கும் ஸ்பெஷல் நன்றி..
இப்படி ஒரு சந்திப்பு நடந்ததா, ரொம்ப சந்தோஷம்
பதிலளிநீக்குஆமாம் ஆகாஷ். இது பண்புடன் குழும சந்திப்பு.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுது, வாசி, பகிர்.
பதிலளிநீக்குசரிங்க அண்ணா.
பதிலளிநீக்கு