ஏன் தமிழர்களுக்கு மட்டும் எப்பயும் பிரச்சனையாகவே இருக்கிறது. உலகத்தில இருக்கிற மத்தவங்களாம் ஃபுட்பால் கோலாகலம், ஆசியா கோப்பைனு எஞ்சாய் பன்னிட்டு இருக்கும் போது நாம மட்டும் ஏன் எப்பயும் எழவு விழுந்த வீட்ட போல இருக்கோம்.
இதுக்கெல்லாம் என்ன காரணம்னு பார்த்தால் பிரிவினை தான்னு தோனுது. தமிழனோட பெரிய பிரச்சனை அவன் எப்பயும் தன்னை மத்தவங்களிடமிருந்து பிரித்துப்பார்ப்பதே.
சில வருஷங்களுக்கு முன்னால் வட இந்தியர்களை ஆரியர்னும் தங்களை திராவிடர்னும் பிரித்தான்,
அப்புறம் சில வருடம் கழித்து திராவிடர்/பார்ப்பனர் என்று மீண்டும் ஒரு பிரிவினை இதுல தமிழ் நாட்டிலயே
ஒரு க்ரூப்ப தனியாக கழட்டிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன்னால ஒரு கூட்டம் நாங்கள் இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் என்று
இந்தியாவை தங்களிடமிருந்து பிரித்தனர். இப்போ இன்னொரு கூட்டம் திராவிடர்கள்னா தென்னிந்தியாவில இருக்கிற மத்த மூனு மாநிலத்தவரும் சேர்ந்திடுவாங்களே, நாம எப்போ அடுத்தவங்கள நம்ம கூட சேர்த்திருக்கோம்னு அதையும் பிரித்து நாம் திராவிடர்கள் இல்லை தமிழர்கள் என்று கூறி தங்களை மற்ற இந்தியர்களிடமிருந்து முழுதும் பிரித்து கொண்டார்கள்.
இனியும் அந்த மாதிரி கூட்டத்தோட சோத்து பிழப்பு தீரலைனா வேற ஏதாவது சொல்லி பிரிக்க வேண்டியதுதான், நம்ம மக்கள்ளயும் ஒரு நாலு பேரு எவனோ புதுசா எதையோ சொல்றானு அவன் பின்னாடி போகவேண்டியது.
தமிழன் மட்டுமில்ல எல்லா மொழிக்காரனும், எல்லா நாட்டுக்காரனும் தான் பிரிக்கிறான், ஆனா அவங்களோட பிரிவினைக்கு ஒரு எல்லை வைத்திருப்பார்கள் யாரை பிரிக்கலாம், யாரை சேர்க்கலாம்னு ஒரு வரையறை வச்சிருப்பாங்க. ஆன நம்மாளுங்க யார்ரெல்லாம் நமக்கு பிடிக்கலையோ அவங்களை எல்லாம் பிரிச்சிடுவாங்க, உதாரணத்திக்கு திராவிடத்தை, தமிழர்களிடமிருந்து பிரித்தது, சிவனை ஆரியக்கடவுள் என்றும், முருகனை தமிழ்க்கடவுள் என்றும் பிரித்தது போன்ற பல.
இப்படி எல்லாத்தையும் தம்மிடமிருந்து பிரித்துவிட்டு தமிழர்களுக்கென்று எதுவும் இல்லைனு போரட்டம் பன்றது, இதையெல்லாம் தினமும் பார்த்து,பார்த்து ஒரு சராசரி தமிழனுக்கு/திராவிடனுக்கு/ஆரியனுக்கு புளித்து விட்டது. இது எதுவுமே தனக்கு தேவையில்லைனு தானும், தன் குடும்பமுமே
போதும்னு சத்தமில்லாமா பலர் செட்டிலாக தொடங்கி விட்டனர். பிரிவினைவாதம் செய்கின்ற கூட்டம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாடு உருப்படாது, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் இருக்கிற வரைக்கும் இந்தியா முன்னேறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக