செப்டம்பர் 21, 2010

எந்திரன் விமர்சனம்

தலைப்பை பார்த்ததும் எந்திரன் படத்தோட கதை விமர்சனம்னு நினைச்சிடாதீங்க, இது எந்திரன் படத்தினை பற்றிய ஒரு விமர்சனம் அவ்வளவேதான்.

சமீபகாலமா பதிவுலகத்தில எந்த பதிவரோட பக்கதுக்கு போனாலும் கண்டிப்பா எந்திரன பத்தி ஒரு இடுகை இருக்கு. நாமளும் ஒரு பதிவு எந்திரன பத்தி போட்டுடனும்னு பயங்கரமா மூளைய கசக்கிட்டிருக்கும் போது துரை ஐயாவிடமிருந்து வந்த இந்த தொடர் பதிவுக்கான அழைப்பு கும்பிட போன தெய்வம் குறுக்கால வந்த மாதிரி இருந்தது.

இனி எந்திரனை பற்றி என் பார்வை,

வெறும் வாயையே மூனு மணி நேரம் மெல்லுர சில பதிர்வர்களுக்கு எந்திரன் பத்தி தினமும் டாப்பிக் கிடைச்சா சும்மாவா விடுவாங்க. அரையோ அரைனு அரைச்சமாவையே திரும்ப திரும்ப அரைச்சு தினமும் ஒரு பதிவ போட்டு ஹிட்ஸ் பார்த்திடறாங்க. இதுல ஒரு சிலர் எந்திரன் எடுத்த பணத்தில அத பண்ணியிருக்கலாம், இத பண்ணியிருக்கலாம்னு ப்ரொடியூசருக்கு அட்வைஸ் வேற.

டீ.வி, எஃப்.எம், பேப்பர்னு எங்க பாத்தாலும் எந்திரன் ஜுரமாவே இருக்கு, இதுல அமெரிக்காவுல புக்கிங் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல எலலா டிக்கெட்டும் வித்து போச்சுனு ஃப்ளாஷ் நியூஸ் வேற போட்டு பதிர்வர்களுக்கு டாப்பிக்க அள்ளி கொடுக்கிறார் எந்திரன். ஆனாலும் ரஜினி ரசிகரல்லாத பல பதிவர்கள் எந்திரனுக்காக நடு நிலமையோடே எழுதி வருவது ஆறுதலை தரும் விஷயம்..

இலவச விளம்பரங்களுக்காக எந்திரனை தகர்தெறிய காத்திருக்கும் அரசியல்வாதிகளின் ப்ரவேசம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, ஒருவேளை இது சன் பிக்சர்ஸ் படம் என்பதால் அடக்கி வாசிக்கிறார்களோ இல்லை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்களோ. எது எப்படியோ இந்த அரசியல் கோமாளிகளாலும் எந்திரனுக்கு ஒரு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

அதே நேரத்தில், அதிக எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்கு சென்றதையும் எந்திரன் ஆதரவாளர்கள் புரிந்து கொண்டு அவர்களும் அளவிற்கு மீறாமல் பார்த்து கொண்டால் எந்திரனுக்கு நல்லது.

எந்திரனின் விளம்பரங்களும்,ஆர்ப்பாட்டங்களும், ரஜினியை பற்றி எந்தவித அபிப்பிராயமும் இதுவரை இல்லாமல் இருந்த என்னைப்போல ஒரு சிலருக்கு கூட, அப்படி என்னதான் இந்த படத்தில இருக்கிறதென்று பார்த்திட வேண்டும் என்று தோன்ற வைத்தது உண்மைதான்.
இதுவே அந்த தாயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஏன் ரஜினிக்கே கூட வெற்றிதான்.

என்னையும் மதித்து, நம்பி என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த துரை ஐயாவுக்கும், அவரை அழைத்த சேட்டைக்கும் நன்றி.
(மக்களே எது திட்டுறாதா இருந்தாலும், என்னய மட்டும் திட்டாதீங்க இவிங்க ரெண்டு பேரையும் சேத்து திட்டுங்க)

தொடரைத்தொடர சிட்டுக்குருவி கவிதாவையும், தமிழையே சுவாசிக்கும் சா.கி ஐயா அவர்களையும் அழைக்கிறேன் .

9 கருத்துகள்:

  1. makkaley pathukonga namadu tamil nanbargal anupura kudukura seidhigal aanaithum nalladukey
    sun pictures avanga potta pannathai thirumba yeduka pandra veelaigal dan daily advertestment aada parthu unga kaasa veenakathinga
    neenga kasta pattu sambathikira kaasa Enthiran la selavu aakathinga

    பதிலளிநீக்கு
  2. செம...! இதை, இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். எல்லாரும் தான் வியாபாரம், விளம்பரம் பண்ணுறாங்க! :-)

    அச்சு கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள், பாராட்டுகள், நன்றிகள் எல்லாம்....!

    பதிலளிநீக்கு
  3. நன்றிங்க சேட்டை.. எல்லாம் நீங்க கொடுத்த டானிக்தான்..

    பதிலளிநீக்கு
  4. I expected something different while click this post.But very usual message.better avoid these kind of posts.Go for something interest.

    பதிலளிநீக்கு
  5. I have posted my blog titled " Vanga blogalam" about " Enthiran Vimarsanam"...It has been listed in Thiraimanam under heading of Enthiran But when i opened my link "http://www.thiraimanam.com/search/http://pesalamblogalam.blogspot.com/2010/10/blog-post.html/ it goes to your link...
    http://naayagar.blogspot.com/2010/09/blog-post.html Pls check by yourself if you have any idea to rectify pls let me know .By ananhtu

    பதிலளிநீக்கு